சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி சரோஜா பெரியதம்பி.சரோஜா பாட்டி கடந்த மாதம் ஸ்மார்ட் ரேசன் கார்டுக்காக தனது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் அளித்திருந்தார்.
ஒரு மாதம் கழித்து கடந்த செவ்வாய்கிழமை ஊழியர்கள் மூலம் சரோஜாவுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு வந்தது.வீட்டில் வந்து பார்த்த போது ஸ்மார்ட் கார்டு அட்டையில் தனது படத்திற்கு பதில் ஸ்மார்ட் ரேசன் அட்டையில் அச்சிட்டு இருப்பது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலின் படம் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிகழ்வு அரசு ஊழியர்களின் அலட்சியத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது காஜல் அகர்வாலின் படம்போட்ட ஸ்மார்ட் கார்டு சமூகவலைத்தங்களில் ஒரு ரவுண்டு அடித்து வருகின்றது.




