தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் விஜய் மற்றும் அஜித் என இருவருடனும் நடித்து அசத்திவிட்டார்.
சூட்டிங் இல்லாத நேரத்தில் ரசிகர்களை சந்திப்பது மற்றும் கடை திறப்பு விழா ஆகியவற்றில் பிஸியாக உள்ளார் காஜல். இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு அதிர்ச்சியான் சம்பவம் நடந்துள்ளளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு காஜலை ரசிகர் ஒருவர்,
அக்கா.. அக்கா... என அழைத்துள்ளார்.
இதனை கேட்டு திரும்பி பார்த்தார் காஜல்... காஜல் திரும்பி பார்த்தவுடன் அந்த ரசிகர் ஐலவ்யூ காஜல் எனக் கூறியுள்ளார். இது குறித்து காஜலிடம் கேட்டதற்கு.. அடுத்த முறை அந்த ரசிகரை பார்க்கும்போது அவருக்கு ராக்கி கட்டவேண்டும் எனக் கூறி ரிப்லை செய்துள்ளார் காஜல்.




