தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் நடிகை காஜல் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த ‘பழனி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா என்ற படத்தின் மூலம் தான் நடிகை காஜல் அகர்வால் மக்களிடையே மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.
அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தார். சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் படம் அவ்வளவாக வெளி வரவில்லை. தமிழில் இந்த வருடம் மட்டும் இவர் ஒரே ஒரு படம் தான் நடித்து உள்ளார். அது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து உள்ளார். ஆனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளார்கள் என்பதால் நடிகை காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் கொஞ்சம் கம்மி தான் என்று சொல்லலாம்.
இதையும் பாருங்க : பிரபல நடிகையுடன் திருப்பதி மலைக்கு நடந்தே சென்ற ரம்யா. வைரலாகும் புகைப்படங்கள்.
மேலும், கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடிகை காஜல் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த “குயின்” திரைப் படத்தை ரீமேக் செய்து வருகிறார்கள். மேலும்,இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. அதோடு இந்த படத்தில் நிறைய ரொமான்ஸ், கசமுசா போன்ற பல மசாலா காட்சிகள் இருப்பதால் சென்சார் போர்டு இந்த படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என சொன்னார்கள்.
ஆனால், படத்தின் இயக்குனர் நீங்கள் சொல்லும் காட்சிகளை நீக்கி விட்டால் படம் வேற மாதிரி இருக்குமே என்று சென்சார் குழுவிடம் சொன்னார். பின் பிடிவாதமாக அந்த சீன்களை வைக்க வேண்டும் என சென்சார் குழுவினர் உடன் சண்டை போட்டு வருகிறார் இயக்குனர் இது ஒருபுறம் இருக்க எப்போதும் சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மானின் கொண்டாட்ட இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் தனது நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் காஜலின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இசை கச்சரியில் காஜல் செய்த இந்த கசமுசா புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.