இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ”தனி ஒருவன் ” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உளது. ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் மாபெரும் ஹிட் அடைந்தது.
இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவும், நடிகை நயன்தாரா தடையவியல் நிபுணராகவும் நடிக்கிண்டனர் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதே போல இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளதால் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிகை சாயிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவலாக இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல முதல் பாகத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி கதாபாத்திரம் செத்துவிடுவதால், இந்த படத்தின் இரண்டாவது பக்கத்தில் ஜெயம் ரவியே வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இரண்டாவது பக்கத்திலும் அரவிந்த் சாமியே வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் ராஜா திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.