மலையாள சினிமாவில் முன்னை நடிகராக இருக்கும் காளிதாஸ் ஜெய்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து மிக பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.
ஜெயராமின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவர் தமிழ் மட்டுமின்று ஏராளமான மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில தமிழ் படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க காதல், விக்ரம், பாவ கதைகள். போன்ற படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த பாவக்கதைகள் படத்தில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் பலரின் பாராட்டுகளை பெற்றார்.
வெற்றிப்படங்களில் காளிதாஸ் பங்களிப்பு :
மேலும் இவர் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்தார். அதே போன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு மகனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூல் சாதனை படைத்து.
எழுந்த கிசுகிசு :
இப்படி இளம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர் கடந்த வருடம் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த இவர் தாரனி என்ற மாடல் அழகி ஒருவருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிறிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவலாக நிலவியது. தாரணி 2021ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தாரிணி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார், மேலும் காளிதாஸ் அவருக்கு ஒரு அற்புதமான ஆச்சரியத்தை கொடுத்தாக கூறப்படுகிறது. அதோடு தாரணியை பாராட்டியும் காளிதாஸ் ஜெய்ராம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்ஸ்டா பதிவு :
இப்படி பட்ட நிலையில் இன்று காதல் தினத்தில் நடிகர் காளிதாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து இனி சிங்கிள் கிடையாது காதலர் தினத்தன்று என்ற பதிவு இட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் இதற்கு பதிலளித்து தாரணி இன்று காளிதாஸை அதிகமாக மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று அதே நேரத்தில் இன்று இவர்கள் ஒன்றாக இல்லை என்று தெரிகிறது.