பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் 2008 ஹிந்தியில் இல் வெளியான துஷ்தோரி என்ற படத்தில் தாமே இயக்கி, தயாரித்து,நடித்தார். இவர் பாலவுடில் ஒரு பவர் ஸ்டார் சீனிவாசன் என்று கூட சொல்லலாம். இவரை விரும்பும் ரசிகர்களும் உள்ளனர் வெறுக்கும் ரசிகர்களும் உள்ளனர்.தற்போது 43 வயதாகவும் அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு இவரே எஸ்.ஆர். கே என்று பட்டம் கொடுத்துக்கொண்டார்.இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் வெறுப்பை சம்மதித்தார்.
மேலும் ரஜினியின் கோச்சடையன் படம் வெளியான போது அந்த மாதிரியான குப்பை படங்களை நான் பார்க்கவே மாட்டேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை கிளப் பினார். இது போன்று படங்களை விமர்சித்து தன்னை ஒரு சினிமா விமர்சகர் என்று காட்டிக்கொண்டார்.சமீபத்தில் இவர் ட்விட்டரில் தமக்கு குடல் புற்றுணை இருப்பதாக குறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
இதுபற்றி அவர் ட்விட்டரில் தெரிவிக்கையில் எனக்கு வயிற்றில் 3ஆம் நிலை புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் இன்னும் 1-2 ஆண்டுகள் தான் வாழ்வேன்.இனிமேல் நான் யாரையும் என்டேர்டைன் செய்யமாட்டான்.நான் சாகபோகிறேன் என்று என் மீது பரித்தப்பட்டு பேசும் யாரிடமும் நான் பேசப்போவது இல்லை.எனக்கு யாருடைய பரித்தாபமும் தேவையில்லை.என்னை இப்போதும் போல வெறுபவர்கலும்,விரும்புபவர்கள் மட்டும் எனக்கு போதும்.எனக்கு இரண்டு விஷயத்தை நினைத்தால் தான் சோகமாக உள்ளது
1.நான் ஒரு அடல்ட் படத்தை தயாரிக்க நினைத்தேன்.
2.அமிதாப் ஜியுடன் ஒரு படத்தில் நடிக்கவோ அல்லது அவரின் படத்தை தயாரிக்கவோ ஆசைபட்டேன்
ஆனால் இந்த இரண்டு ஆசையும் நிறைவேறவில்லைநான் இப்போது எனது நேரத்தை எனது குடும்பத்துடன் செலவழித்து வருகிறேன்.என்னை நீங்கள் விரும்பினாலும் சரி, வெறுத்தலும் சரி நான் அனைவரையும் நேசிக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார் கே.ஆர். கே