மீராக்கு குறும்படம் இருக்கட்டும் மது மற்றும் சாண்டியை கமல் என்ன செய்தார் தெரியுமா.!

0
11568
sandy-madhu
- Advertisement -

இந்த வார எபிசோட் ஒன்றில் மதுமிதாவிற்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதாவிற்கு முகத்தில் பேஸ்டை பூசிக்கொண்டு ‘மாரியம்மா மாரியம்மா’ பாடலுக்கு நடனமாட சொன்னார்கள். அதற்க்கு முதலில் சிரித்தபடி ஆடத்துவங்கினார் மதுமிதா, அப்போது சாண்டி ‘கொஞ்சம் ஹேவியா ஆடு’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

சாண்டி மீண்டும் மீண்டும் ‘ கொஞ்சம் ஹேவியா ஆடு ‘ என்று கூறிக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான மதுமிதா சீக்கிரமா சொல்லுங்க எனக்கு மூஞ்செல்லாம் எரியுது என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அப்போது சாண்டி எரியுதா என்று எதார்த்தமாக கேட்க கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மதுமிதா.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறியது இவர் தான்.! அதிகாரபூர்வ தகவல்.! என்னா ஒரு ட்விஸ்ட்.!

- Advertisement -

இதனால் சாண்டியை கண்ட மேனிக்கு திட்டத் துவங்கினார் மதுமிதா. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிகே சென்ற மதுமிதா, ஒருவர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிப்பவர் எல்லாம் ஆம்பளையா த்து என்று மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த துவங்கினார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டி’வார்த்தையா கொஞ்சம் பாத்து பேசு ‘என்றார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் மீரா மற்றும் சேரனின் பஞ்சாயத்து துவங்கியது. இதனால் மது மற்றும் சாண்டியின் பிரச்சனையை மறந்துவிட்ட்டனர். இருப்பினும் கமல் சும்மா விடுவாரா. மதுமிதா மற்றும் சாண்டி பஞ்சாயத்தையும் தீர்த்து வைத்துள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், இருவரையும் கமல் அந்த அளவிற்க்கு கண்டிக்கவில்லை. மாறாக மதுமிதாவை போன்று நடித்துக் காண்பித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார் கமல். மேலும், சாண்டியை இப்படியே இருக்க சொல்லி கொஞ்சம் அட்வைசும் செய்துள்ளார். அதற்க்கு முக்கிய காரணமே, மதுமிதா, சாண்டி எல்லை மீறி பேசியும் சாண்டி பொறுமையை கடைபிடித்து பிரச்னையை பெரிதாக்காமல் தடுத்தார்.

Advertisement