ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு – தனது கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் குறித்து கமல் வெளியிட்ட ஆவேச அறிக்கை.

0
852
kamal
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அவருக்கு 36,855 வாக்குகள் கிடைத்தன.இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவது தொடர்பாகநேற்று மாலை அக்கட்சியின் தலைவர் கமலிடம் மகேந்திரன் நேரில் கடிதம் கொடுத்துள்ளார். அவரது விலகல் கடிதம் ஏற்கப்பட்டது தொடர்பாக ம.நீ.ம தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு புதன்கிழமை மாலை வரை வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில், புதன்கிழமை இரவு அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அதில், கட்சி அமைப்பு, நிர்வாக ரீதியான மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், எம். முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே. குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களின் ராஜிநாமா கடிதங்கள் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொள்வதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் தலைவரே முடிவு செய்யட்டும் என்று தெரியப்படுத்தினர். அவர்களின் ராஜிநாமா கடிதங்களை தலைவர் விரைவில் பரிசீலிப்பார்,” என்று கூறப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : எதிர் நீச்சல் பட நடிகையா இப்படி ஒரு உடையில் – பேசாம இவங்களே ஹீரோயினா பண்ணி இருக்கலாம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மகேந்திரன் வெளியேறியது குறித்து கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

உயிரே உறவே தமிழே,
பத்திரமாக இருக்கிறீர்களா?
’சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். ‘துரோகிகளை களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர். ஆர். மகேந்திரன்.கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதராணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார்.

-விளம்பரம்-


கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களுக்கும் திறமை இல்லாதவர்களுக்கும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களை போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.


என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர, சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளரவேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை.
மண் மொழி மக்கள் காக்க களத்தில் நிற்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement