ராஜவெற்றி – தீபிகாவை தொடர்ந்து காதலியை கரம்பிடித்த கனா காணும் காலங்கள் பிரபலம் – யார் தெரியுமா ?

0
1913
- Advertisement -

ராஜ்- தீபிகாவை தொடர்ந்து கனா காணும் காலங்கள் நரேஷ் தன்னுடைய காதலி கரம் பிடிக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.

-விளம்பரம்-

அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

கனா காணும் காலங்கள் 2:

இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி இதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனவர் தான் ராஜ் வெற்றி பிரபு.

ராஜ்- தீபிகா திருமணம்:

சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் காதலிப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். பின் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தற்போது புது காதல் ஜோடி இணைய இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கனா காணும் காலங்கள் சீசன் 2வில் மதன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நரேஷ். இந்த தொடரில் சிறகுகள் பள்ளிக்கு இவர் புதுவரவு.

-விளம்பரம்-

நரேஷ் நிச்சயதார்த்தம் :

தற்போது நரேஷ்- மாதவி நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சேர்ந்து நிறைய ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர்கள் காதலை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். இதனால் பலருமே எப்போது கல்யாணம்? என்று கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக தங்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை நரேஷ் பதிவிட்டிருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம் :

தற்போது இணையத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
மேலும், இவர்களுடைய நிச்சயதார்த்தத்திற்கு கனா காணும் காலங்கள் டீம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் இவர்களுடைய நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement