அட்ஜஸ்ட்மண்ட் பண்ணாதா தான் வாய்ப்புன்னு சொன்னாங்க – காஞ்சனா பட திருநங்கை நடிகை

0
61960
kanchana-priya
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் காஞ்சனா. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் திருநங்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். திருநங்கைகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றம் வழிவகுக்கும் வகையில் இந்த படம் அமைந்து உள்ளது. இந்த படம் முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிபிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை பிரியா. இந்நிலையில் நடிகை பிரியா அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் பொதுவாகவே சினிமா என்றால் பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும். அந்த வகையில் திருநங்கைகளுக்கும் ஏதாவது தொந்தரவு, அட்ஜ்ஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறதா? அதில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்டு உள்ளார்.

- Advertisement -

அதற்கு அவர் கூறியது, என்னுடைய முகநூலில் நிறைய இயக்குனர், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் எப்போதுமே என்னுடைய முகநூலில் தினமும் நடக்கும் ஆக்டிவிட்டீஸ்களை பதிவு செய்து கொண்டிருப்பேன். அதை பார்த்து விட்டு நிறைய பேர் என்னிடம் போன் பண்ணி சான்ஸ் கொடுப்பார்கள். அந்த மாதிரி ஒரு ப்ரொடியூசர் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு வாய்ப்பு இருக்கு என்று சொல்லி இருந்தார்.

வீடியோவில் 11 : 10 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

பின் என் நம்பரை கேட்டார். நானும் என்னுடைய மொபைல் நம்பரை கொடுத்தேன். இதன் பிறகு ஒரு வாரம் போன் செய்து பிராஜக்ட் பத்தி பேசினாங்க. பிறகு லைட்டா அவருடைய பேச்சு வார்த்தைகள் மாறியது. எப்படி என்று பார்த்தால் நீங்கள் எல்லாம் எப்படி இந்த மாதிரி மாறினீர்கள் என்று அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். நான் உடனே ஏன் படத்தில் இந்த மாதிரி காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை எனக்கு உங்களைப் பற்றிய புரிதல் எதுவும் எதுவும் தெரியாது.

அதனால் தான் கேட்டேன் என்று கூறுவர். பிறகு சில நாட்களில் தயாரிப்பாளர் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் தான் வாய்ப்பு தருவேன் என்று கூறுவார். நான் உடனே அந்த போனை கட் செய்து விடுவேன். இந்த மாதிரி நிறைய கால் எனக்கு வந்து இருக்கு. அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணினால் தான் வாய்ப்பு என்று பல பேர் சொல்லுவார்கள். இந்த மாதிரி நான் வந்த வாய்ப்புகள் எல்லாம் தவற விட்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி படம் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை, அது எனக்கு பிடிக்காது. இந்த மாதிரி மற்ற திருநங்கைகள் வாழ்க்கையிலும் நடக்கும். ஆனால், அவர்களுடைய சூழ்நிலையை பொருத்து தான் என்று கூறியிருந்தார்.

Advertisement