நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து – கங்கனாவின் விளக்கம். அவரின் பழைய பதிவை தோண்டி எடுத்த நெட்டிசன்கள்.

0
236
- Advertisement -

தன்னைக் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகை கங்கனா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெற இருக்கிறது. மேலும், வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறுகிறது.
தற்போது அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

- Advertisement -

பிரச்சாரத்தில் கங்கனா சொன்னது:

இதனால் இவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவர் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்த போது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்? என்று கேட்டிருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு தான் என்று கூறி கங்கனாவை கிண்டலடித்து வருகிறார்கள்.

மாட்டிறைச்சி குறித்து கங்கனா சொன்னது:

இதனை அடுத்து கங்கனா கடந்த 2019 ஆம் ஆண்டு கூறி இருந்ததை காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில், மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ எந்த தவறு கிடையாது. இது மதத்தைப் பற்றியது கிடையாது. நான் வீட்டை விட்டு வெளியேறும்போது என்னுடைய அம்மா மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்று தடை போடுவார். ஆனால், அந்த மாட்டு இறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன் என்றெல்லாம் பேசியிருந்தார்.

-விளம்பரம்-

கங்கனா விளக்கம்:

இதை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து கங்கனா, நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியும் சாப்பிடாத இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னை பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரவுகின்றது. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறைகளை ஆதரித்தும் ஊக்குவித்தும் வருகிறேன். அதனால், இது போன்ற யுத்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என்னுடைய மக்களுக்கு என்னை பற்றி தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

கங்கனா திரைப்பயணம்:

பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். 2006 தான் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

Advertisement