போதைக்கு அடிமையானவர் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தெலுங்கில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாலிவுட்டில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ராமாயண கதை எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த படத்தின் வேலைகள் சமீப காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதுவும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள். மேலும், அதற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். கேஜிஎப் புகழ் யஷ் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பின் சீதை கதாபாத்திரத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்க இருந்தது. தற்போது சாய் பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஹிந்தியில் உருவாகும் ராமாயணம்:
இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். மேலும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரன்பீர் கபூர் ராமனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கனா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
கங்கனா பதிவு:
அதாவது, இந்தியில் உருவாகும் ராமாயணம் படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு ஒல்லியான வெள்ளை எலி என அழைக்கப்படும் நடிகர் ராமராக நடிக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். இவர் சினிமாவில் ஒவ்வொருவரை பற்றியும் அவதூறு பரப்பி பிரபலமானவர். பெண்கள் பின்னால் சுற்றுபவர். போதைக்கு அடிமையானவர். தோற்றத்திலும் செயலிலும் ராமரை போல் இருக்கும் தென்னிந்திய நடிகருக்கு இராவணன் வேடத்தை கொடுத்திருக்கின்றனர்.
ரன்பீர் குறித்து சொன்னது:
ஆனால், போதைக்கு அடிமையானவர் ராமனாக நடிக்க கூடாது என்று ரன்பீர் கபூரை கடுமையாக விமர்சித்து கூறியிருக்கிறார். தற்போது கங்கனாவின் இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ரன்பீர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார்.
It’s the Biggest Khulasa of the year. The Secret of JUNG of Kangana Ranaut and Ranbir Kapoor! Watch and share pls…. https://t.co/4YukVl2DzY via @YouTube
— KRK (@kamaalrkhan) June 13, 2023
கங்கனா திரைப்பயணம்:
2006ல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார். பின் தமிழில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தின் பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. பலரும் இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.