அந்த மோசமான படத்திற்கு அவார்ட் கொடுத்தாங்க. ஆனால், ஒன்னு கூட சுஷாந்த்துக்கு ஏன் இல்லை – பாலிவுட் சினிமாவை வெளுத்து வாங்கிய கங்கனா.

0
1127
kanagana
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும்,ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. கடந்த சில மாதங்களாகவே சுஷாந்த் சிங் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பல செய்திகள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கின்றன.

-விளம்பரம்-

பாலிவுட்டில் எந்த ஒரு பின்னணி இல்லாமலும், ஆதரவும் இல்லாமலும் வளர்ந்த நடிகர் சுஷாந்த் சிங்க்கு மன அழுத்தம் ஏற்பட அங்குள்ள சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு மன தைரியம் இல்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சுஷாந்த் சிங் மரணத்தை குறித்து பலர் விமர்சனம் செய்து உள்ளார்.

- Advertisement -

இப்படி விமர்சித்தவர்களை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விளாசியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, சுஷாந்தை நடிகராக மட்டுமே தான் உங்களுக்கு தெரியும். ஆனால், அவர் படிப்பில் மிக கெட்டிக்காரர். இந்த நிலையில் அவருக்கு எப்படி மைண்ட் வீக்காக இருக்கும். சுஷாந்தின் கடைசி சில போஸ்ட்டுகளை பார்த்தால் அவர் தன் படங்களை பார்க்குமாறு மக்களை கெஞ்சியுள்ளார் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

அதே போல சுஷாந்துக்கு மற்ற நடிகர்களை போல காட்ஃபாதர் யாரும் இல்லை. அதனால் தான் அவரை விரைவில் இந்த பாலிவுட் தூக்கி எரிந்துவிடும் என்று அவர் நினைத்து இருக்கிறார். மேலும், சுஷாந்த் அளித்த பேட்டி ஒன்றில் தான் பாலிவுட்டில் தனித்து இருப்பதாக உணருவதாக அவர் தெரிவித்திருந்ததை கூறிய கங்கனா. சுஷாந்த் சிங். இவர் நடிப்பில் வந்த சிச்சோரே அல்லது தோனி படத்திற்காக அவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. ஆனால், கல்லி போன்ற மோசமான படத்திற்கு விருது கிடைத்தது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், தன்னை பற்றிய பேசிய கங்கனா, எங்களுக்கு உங்களிடம் இருந்து எதுவும் தேவையில்லை. உங்களின் படங்கள் தேவையில்லை. ஆனால் நாங்கள் நடிக்கும் படங்களை ஏன் அங்கீகரிப்பது இல்லை. நான் இயக்கிய படத்தை சூப்பர் ஹிட்டாகியும் பிளாப் என்றீர்கள்? என் மீது ஏன் ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது? என்னை ஏன் சிறைக்கு அனுப்பத் துடிக்கிறீர்கள்? என்று தெரிவித்துள்ளார்.மேலும், மீடியாவில் சுஷாந்த்திற்கு நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனை இருந்ததாகவும் அதனால் அவர் மாத்திரைகளுக்கு அடிமையாக இருந்ததாவும் கூறுகின்றனர். ஆனால், சஞ்சய் தத் போதை பழக்கம் மீடியாக்களுக்கு குயூட்டாக தெரிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் கங்கனா, கங்கானாவின் இந்த பதிவிற்கு பின் சினிமா துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் #JusticeForSushantSinghRajput என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

Advertisement