தன்னைத் தானே திருமணம் செய்த `என் கணவன் என் தோழன்’ சீரியல் நடிகை

0
791
- Advertisement -

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட ஹிந்தி சீரியல் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தொடர் ‘என் கணவர் என் தோழன்’ தொடர். அந்த தொடர் இந்தியில் வெற்றியடைந்த ”தியா ஓர் பாதீ ஹம்’ என்ற தொடரின் ரீமேக் ஆகும். அந்த தொடரை அப்படியே தமிழில் டப் செய்து விஜய் டிவி ஒளிபரப்பி இருந்தது.

-விளம்பரம்-

இந்தியில் அந்த தொடர் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் 927 எபிசோட் வரை மட்டும் தான் ஒளிபரப்பபட்டது. பின்னர் அந்த தொடரை நிறுத்திவிட்டனர். தற்போது அதே சீரியலை தான் ராஜா ராணி 2 ரீமேக்ஸ் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சீரியல் ஏற்கனவே ஒளிபரப்பட்ட சீரியல் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

Diya Aur Baati Hum சீரியல்:

இந்நிலையில் Diya Aur Baati Hum என்ற இந்தி சீரியலில் நடித்த நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, Diya Aur Baati Hum என்ற சீரியலில் நடித்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் சமீபத்தில் தான் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இவர் கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து பலருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது.

கனிஷ்கா சோனி பதிவிட்ட புகைப்படம்:

மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பது, நான் சுய நினைவுடன் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான் தான். எனக்கு யாரும் தேவையில்லை. தனிமையில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் தெய்வம், சிவன், மற்றும் சக்தி எல்லாம் என்னுள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இதற்கிடையே இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி அந்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

கனிஷ்கா சோனி வெளியிட்ட வீடியோ:

அதில் அவர், என்னை நானே திருமணம் செய்து கொண்டது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்திய கலாச்சாரத்தை நான் அவமதிப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் என் வாழ்நாளில் இதுவரை சந்திக்கவில்லை. அதனால் தான் தனியாக இருக்க முடிவு செய்தேன். திருமணம் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அதில் காதலும், நேர்மையும் இருக்க வேண்டும்.

விமர்சனத்திற்கு கனிஷ்கா சோனி சொன்னது:

இப்போது அப்படி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே தனியாக வாழ்வதே முடிவு செய்து தான் நான் என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். ஆனால், சிலர் நான் இந்த பதிவை பதிவிடும் போது குடித்துவிட்டு இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். உண்மையில் எனக்கு குடிப்பழக்கம் என்பதெல்லாம் கிடையாது. தற்போது நான் ஹாலிவுட்டில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement