“திரும்பவும் அவரே முதலமைச்சர் ஆகணும்” – குடும்பத்துடன் தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்த கஞ்சா கறுப்பு

0
426
Kanja
- Advertisement -

எடப்பாடியே மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் தீச்சட்டி எடுத்து வேண்டுதல் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார். சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை படத்தில் போட்டார்.

- Advertisement -

கஞ்சா கருப்பு திரைப்பயணம்:

ஆனால், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும், மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பும் ஒன்று. இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்று படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது. இதனால் மனம் உடைந்த கஞ்சா கறுப்பு கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

கஞ்சா கருப்பு வேண்டுதல்:

இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு எடப்பாடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று தீச்சட்டி எடுத்து வேண்டுதல் செய்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுத்து இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எடப்பாடி அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுகிறார்.

-விளம்பரம்-

கஞ்சா கருப்பு அளித்த பேட்டி:

அடுத்து அவர் முதலமைச்சராக வரவேண்டும். கூடிய விரைவில் அவருடைய நல்லாட்சி அமையும். அதற்காகத்தான் நான் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்து இருக்கிறேன். தற்போது இருக்கும் ஆளுங்கட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கரண்ட் பில், வீட்டு வரி என எல்லாமே அதிகரித்துவிட்டது. விலைவாசி எல்லாம் கூடிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு எடப்பாடி ஆட்சி அமைந்தால் தான். அவருடைய ஆட்சியில் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement