பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.
சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி:
இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து வந்தார். பின் பாரதியின் தம்பி அகிலை அஞ்சலி திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் இவர் தன் அக்காவை பழிவாங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி இருந்தார். மேலும், அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக நின்று வருகிறார். இப்படி பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அஞ்சலி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த தொடரில் இருந்து கண்மணி விலகி வேறு ஒரு நடிகை நடித்து கொண்டு வருகிறார்.
சீரியலில் இருந்து விலகிய கண்மணி:
இந்த நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கண்மணி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, பாரதி கண்ணம்மா அஞ்சலி கதாபாத்திரத்தை நான் எப்போதுமே மிஸ் பண்ணுவேன். எனக்கு கிடைத்த முதல் கதாபாத்திரம். இந்த கேரக்டர் வழியாகத்தான் நான் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையானேன். இந்த வேடத்தில் நடிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த அஞ்சலி கேரக்டருக்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன். ஏனெனில், என்னால் ஒரு நேரத்தில் பல ப்ராஜெட்களில் வேலை செய்ய முடியாது.
சீரியலில் இருந்து விலகிய காரணம்:
ஒரு நேரத்தில் ஒன்றை எடுத்து எனது 100 சதவீதத்தை கொடுப்பது தான் என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல். அதனால் ஒரு நடிகையாக நான் என்னை நிரூபிக்க நீண்ட காலம் காத்திருந்தேன். அஞ்சலியாக மூன்று வருடங்கள் கடந்த உடன் அடுத்த கட்டங்களுக்கு செல்ல முடிவு செய்தேன். அதனால் தான் பாரதி கண்ணம்மா சீரியல் விட்டு வெளியேறுகிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கண்மணி களமிறங்கியிருக்கிறார். பின் இவர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
கண்மணி நடிக்கும் சீரியல்:
இந்த சீரியலில் இவர் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா என்ற ஒரு கதாபாத்திரம். தனது படிப்பை தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அப்படியான அமுதா என்கிற வேடத்தில் தான் கண்மணி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் கண்மணி வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அது சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.