நெருங்கிய நண்பரின் திடீர் இறப்பு, கடும் மன வருத்தத்தில் நடிகர் சந்தானம்.

0
55619
- Advertisement -

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன் நேற்று (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-

டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.

- Advertisement -

மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார் மேலும் சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சேதுவின் இந்த திடீர் மறைவு திரை துறையில் உள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சேதுவின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் தனது வருத்தத்தை கூறியுள்ள நடிகர் சந்தானம், என்னுடைய நண்பர் சேதுவின் மரண செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் மன அழுத்தத்துடனும் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இவர்கள் மட்டுமல்ல சேதுவின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் இரங்கலை தெரிவித்துள்ள அனைவரும் சேது மிகவும் ஒரு நல் உள்ளம் கொண்ட மனிதர் என்று தான் தங்களது வருத்தத்தை கூறி வருகின்றனர். நடிகை குஷ்பூ சேதுவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்ததோடு, ட்விட்டரில் சேதுவின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ்ஸால் பலரும் சோகத்தில் இருக்கும் நிலையில் தற்போது சேதுவின் இந்த மரணம் திரை துறையில் உள்ள பலரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், 144 தடை உத்தரவால் சேதுவின் இறுதி சடங்கில் பிரபலங்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement