10 ரூபா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கையே திசைமாறிடுச்சு – கொடிகட்டி பறந்த நடிகையின் மறுபக்கம்.

0
853
leela
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லீலாவதி. இவர் ஒரு கன்னட திரைப்பட நடிகை. இருந்தாலும் இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். என் டி ராமாராவ், ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமலஹாசன், சிரஞ்சீவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் 400 க்கும் மேலாக கன்னடத்தில் நடித்து இருக்கிறார். பின் இவர் சினிமாவில் இருந்து விலகி தற்போது விவசாயம் செய்து வருகிறார். பெங்களூரை அடுத்த சொலதேவனஹல்லி மலை பகுதியில் தான் அவரின் பண்ணை வீடு இருக்கிறது.

-விளம்பரம்-

பழத்தோட்டம், நெற்பயிர், காய்கறிகள் சாகுபடி உடன் பத்துக்கும் மேற்பட்ட நாய்களையும் இவர் வளர்த்து வருகிறார். தன் ஒரே மகனுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, மங்களூருக்கு பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமம் தான் என்னுடைய பூர்வீகம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். நல்லா படிக்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், குடும்ப வறுமையால் என் வாழ்க்கையை யூகிக்க முடியாத வகையில் மாறிவிட்டது? இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் மொத்த குடும்பமும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று என் பெற்றோர் என்னை வீட்டு வேலைக்கு அனுப்பி இருக்க மாட்டார்கள்.

- Advertisement -

நடிகை லீலாவதி அளித்த பேட்டி:

விதியின் விளையாட்டு, நான் மட்டும் தப்ப முடியுமா? வீட்டு வேலையில் மாதம் எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். பின் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 10 ரூபாயாக என்னுடைய சம்பளம் அதிகமானது. அதுக்கு நிறைய போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொண்டேன். நாடகத்தில் நடிக்கிறது, புரோடக்சன் வேலை என்று நாள் முழுக்க ரொம்பவே சிரமப்பட்டேன். அப்போ நான் சின்னப் ஒன்று என்பதால் சிரமம் பார்க்காமல் வேலை செய்தேன். வசனங்களை மனப்பாடம் செய்து தடுமாற்றம் இல்லாமல் பேசி நடித்ததால் நாடகங்களில் எனக்கு ஹீரோயினி வேடம் எனக்கு கிடைத்தது. பின் சில காலங்களிலேயே எனக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. லீலா என்ற பெயரை சினிமாவுக்காக லீலாவதி என்று மாற்றிக்கொண்டேன்.

சினமா அனுபவம் குறித்து சொன்னது:

நடிகையா புகழ்பெற, வறுமையில் இருந்து மேலே போகணும் என்கிற ஆசையில் சினிமாவுக்காக பல விஷயங்களை நான் மாற்றிக்கொண்டேன். ஹீரோயினியாக நிறைய படங்களில் நடித்து இருந்தேன். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தேன். பல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். மேலும், கன்னட சினிமா உலகில் என்னுடைய படங்கள் வெள்ளி விழா கொண்டிருந்தது. ஆனாலும், எனக்கு பெரிதாக சம்பளம் கொடுக்கவில்லை. 1970 களுக்கு பிறகுதான் எனக்கு மொத்தமாகவே பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்தார்கள். அந்த நேரத்தில் தான் அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க இயக்குநர் கே பாலச்சந்தர் சார் என் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

-விளம்பரம்-

தன் மகன் குறித்து சொன்னது:

அதை காப்பாற்ற வேண்டும் என்று பயங்கரமாக மெனக்கெட்டு நடித்துக் கொடுத்தேன். பாலச்சந்தர் சார் மட்டும் இல்லை என்றால் என்னை தமிழ் சினிமாவில் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். அதுமட்டுமில்லாமல் என்னுடைய மகன் வினோத் ராஜ். இவரும் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த போது இவரும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வகுப்பு தோழர்கள். தற்போது நான் என் மகனுடன் இணைந்து விவசாய வேலைகளை செய்து வருகிறேன்.

விவசாயம் குறித்து சொன்னது:

சினிமாவும், விவசாய வேலையும் தான் என்னை இப்ப வரைக்கும் இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதனால் தான் சினிமா போதும் என்று முடிவெடுத்தவுடன் விவசாயத்தில் இறங்கி விட்டேன். என்னுடைய வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது. அதுக்கு ஏற்ற மாதிரி நாங்கள் வசிக்கும் இடமும் கிடைத்தது. தரிசாக கிடந்த நிலத்தை இப்போ செழிப்பான தோட்டமாக மாற்றி இருக்கிறோம். அதற்கு பிரதமர் தேவகவுடா, முன்னாள் மத்திய அமைச்சர், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் பலரும் என் விவசாய வேலைகளை பாராட்டி இருந்தார்கள். நான் இருக்கும் சொலதேவனஹல்லி மலைப்பகுதி. இங்கு பழங்குடியின மக்கள் வாழும் இடம்.

மருத்துவமனை திட்டம்:

இங்கு 50 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவமனையை கட்டியிருக்கிறோம். கூடிய விரைவில் அந்த பணிகள் முடிவடையும். இதனால் மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஒருவர் நிலத்தை தானமாக கொடுத்தார். மருத்துவர்கள் உட்பட போதுமான ஊழியர்களை நியமித்து கர்நாடக அரசு ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும். நானும் என் மகனும் எங்க தேவைக்கு மீறி என்னதான் கொண்டு போகப் போறோம்? ஒன்னும் இல்லை. மக்களோட அன்பால் தான் நல்ல நிலைக்கு உயர்ந்தேன். அதனால் என் தேவைக்கு மீறிய செல்வத்தை மக்களுக்கு கொடுக்கிறது தான் சரியாக இருக்கும் என்று அதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement