பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படத்தை பார்க்க காத்துகொண்டு இருக்கும் நபர்களுக்கு கார்த்தி கொடுத்த நச் பதில்.

0
498
karthi
- Advertisement -

பொன்னியின் செல்வன் நாவல் குறித்தும் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் கார்த்தி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். இவர் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

படத்தின் டீசர் :

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது.இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் சந்திப்பு:

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.அதன் முதற்கட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், திரிஷா, மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள்.

கார்த்தியின் பதில் :

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் பொன்னியின் செல்வன் நாவலுடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் படம் குறித்து கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த கார்த்தி ‘இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரத்தில் நடித்துவர்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் நான் இருந்த ஒவ்வொரு அனுபவமும் மிகவும் உற்சாகமாக இருந்தது. அப்படித்தான் நீங்களும் இருக்கப் போகிறீர்கள். மணிரத்தினம் இந்த படத்தை எப்படி செய்து இருப்பார் என்று மார்க் போட வராதீர்கள். இது ஒரு அனுபவம், இந்த தலைமுறைக்கு கிடைத்த ஒரு அனுபவம். போன தலைமுறைக்கு அது கிடைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement