கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் பேசிய கார்த்தி – வைரலாகும் வீடியோ இதோ.

0
519
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து நடிகர் கார்த்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜய்காந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள். பின் கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவித்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதித்தார்கள். பின் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. மேலும், விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஞ்சலி செலுத்திய கார்த்தி:

இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு வராத கார்த்தி தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தன்னுடைய அஞ்சலியை கார்த்தி, அவருடைய தந்தை நடிகர் சிவகுமார் செலுத்திருக்கிறார்கள். பின் நடிகர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்து, கேப்டன் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு என்னால் மரியாதை செலுத்த முடியவில்லை என்பது என்னுடைய வாழ்நாள் முழுக்க ஒரு பெரிய குறையாகவே இருக்கும்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அவருடன் எனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு எல்லாம் கிடைத்ததில்லை. நான் சிறுவனாக இருந்த போது அவருடைய வீட்டில் தினமும் யாருக்காவது சாப்பாடு போட்டு கொண்டே இருப்பார்கள் என்று சொல்வார்கள். அவருடைய படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை நான் நேரில் சந்தித்தபோது மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் வந்த பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் பார்க்கும்போது அவரை தான் மனதில் நினைத்துக் கொள்வோம். அவர் மிகப்பெரிய ஆளுமை.

இரங்கல் கூட்டம்:

அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் பிரச்சனைகளை தீர்த்தோம். தற்போது அவர் நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது. எங்களுடைய மனதில் அவர் எப்போதும் இருப்பார். வருகிற 19ஆம் தேதி கேப்டனுக்காக ஒரு இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். அவருடைய புகழ் எப்பவும் நிலைக்கும் வகையில் நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், அரசிற்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தையும் அந்த கூட்டத்தில் சொல்வோம் என்று கண் கலங்கியவாறு கார்த்தி கூறியிருக்கிறார்.

Advertisement