இந்த டெம்ப்ளட்டை முத்தையா எப்போது விடுவார் ? – காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் விமர்சனம் இதோ.

0
2949
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர்யா. இறுதியாக இவர் நடித்த சார்பட்டா பரம்பரை, டெட்டி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் நடித்த கேப்டன் படம் படு தோல்வியடைந்து. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார் இதற்கு முன்பு முத்தையா நடிப்பில் கொம்பன் விரும்பன் மருது போன்ற படங்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்லானி நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

படத்தின் கதை :

தமிழ்ச்செல்வியின் சொத்துக்களை அவருடைய முறை மாமன்கள் அபகரிக்க நினைக்கிறார்கள். இதனால் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொள்ள முறை மாமன்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த ஒரு நிலையில் தான் தமிழ்ச்செல்வி காதர் பாட்ஷாவை சந்திக்க ஜெயிலுக்கு செல்கிறார். ஆனால், இந்த சந்திப்பு கை கூடாமல் போகிறது. இதனை தொடர்ந்து தன்னை சந்திக்க வந்ததை அறிந்து கொண்ட காதர் பாட்ஷா தன்னை தேடி வந்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள செல்வியை தேடி செல்கிறார். அப்போதுதான் மோதல் ஏற்படுகிறது.

அதற்கு பிறகு என்னானது காதர் பாட்சாவிற்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? செல்வி ஏன் காதர் பாட்சாவை சந்திக்க சென்றார், செல்வியின் சொத்துக்கள் என்னானது. செல்வியுடன் இருக்கும் அவரது அண்ணன் மகள்களின் நிலைமை என்ன என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

படத்தை பற்றிய அலசல் :

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக பொருந்தவில்லை. வசன உச்சரிப்பு நடிப்பு சண்டை காட்சிகள் என அனைத்தையுமே சுமாராகத்தான் நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடம்பு மட்டும்தான் இருக்கிறது தவிர மத்தபடி இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கும் இவருக்கும் சுத்தமாகவே செட்டாகவில்லை.

இவரை எடுத்து ஜமாத் தலைவராக நடிகர் பிரபு நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் சில நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிரட்டலாக இருக்கிறது செல்வியாக சித்திக் இத்தாலி நடித்திருக்கிறார்.பொதுவாகவே முத்தையா படத்தில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்த இந்த படத்தில் பெண் கதாபாத்திரம் காட்சியை நிரப்பவே பயன்படுகிறது.

முதல் பாதியில் சகட்டு மேனிக்கு வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் தேவையே இல்லை பில்டபுக்கு பஞ்சமே இல்லை படம் பார்ப்பவர்களுக்கு படம் பார்ப்பவர்களின் மனநிலையை சோதித்தது என்றே சொல்லலாம். குறிப்பாக ஆரியாவின் நடிப்பு பார்வையாளர்களை எரிச்சலடைய செய்திருக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் நிதானமாக சென்றிருக்கிறது. இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு இடையேயான பிணைப்பை இயக்குனர் சொன்ன விதம் சிறப்பு ஆனால் கதைக்குள் கதை என்று வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் முத்தையா சொல்ல வந்த கருத்து பார்வையாளர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை என்றே சொல்லலாம் இன்னும் இயக்குனர் கதைக்களத்தில் கொண்டு செல்லும் இடத்தில் மெனக்கட்டு இருக்கலாம் என்று சொல்லலாம், ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது, ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக படத்தில் எந்த ஒரு சுவாரசியமோ சஸ்பென்சுகளோ இல்லை ஆக மொத்தம் ரசிகர்களுக்கு ஒரு ரொம்ப ரொம்ப சுமாரான படமாக தான் இருக்கிறது. இது முத்தையாவின் அதே பழைய டெம்லேட்டில் வந்துள்ள இன்னொரு படம் தான்.

Advertisement