- Advertisement -
விஜய், ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி என்றாலே படம் பக்கா மாஸாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. தற்போதும் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக கை கோர்க்கவிருக்கும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
-விளம்பரம்-
சில தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதிலேயே தெரிந்தது இந்த படத்தின் எதிர்பார்ப்பு என்னவென்பது. கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தின் கதாநாயகி என்பது உறுதியான நிலையில் முதல் முறையாக அவர் இந்த படம் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.
- Advertisement -
பைரவா படத்தை விட இந்த படத்தில் தன்னுடைய ரோல் மிக வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும் என்றும், இந்த படத்தில் தனக்கு காஸ்டியூம் டிசைனராக பல்லவி சிங் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
Advertisement