என்ன இது டென்ட் துணியா – கேலிக்கு உள்ளான கீர்த்தி சுரேஷ்ஷின் ஆடை.

0
660
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் கீர்த்தி நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. சுரேஷ்க்கு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ் :

இப்படி நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த ஆடை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் கடந்த 2021ஆம் ஆண்டு நடித்திருந்த ரங்குதே படத்தின் இயக்குனர் அட்லூரி சமீபத்தில் பூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கேலி செய்யும் ரசிகர்கள் :

அப்போது இவர் அணிந்திருந்த கவர்ச்சி உடை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது இவர் அணிந்து வந்த உடை பல வணங்களாக பந்தல் போடுவதற்கு உபயோக படுத்தும் சாமியானா போன்று இருந்ததாக பலரும் கேலி செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து கீர்த்தி சுரேஷை சாமியானா பேபி என்று பெயர் வைத்தும் தற்போது சிலர் அழைக்க தொடங்கியுள்ளனர்.

Advertisement