நிம்மதியே போச்சு, தலைமறைவு வாழ்க்கை வாழும் 25 கோடி ரூபாய் முதல் பரிசு பெற்ற வாலிபர். என்ன காரணம்.

0
772
lottery
- Advertisement -

பணம் இருந்தால் பத்தும் செய்யலாம் அந்த பணம் அதிகமானால் அந்த பணம் நம்ம வைத்து செய்துவிடும். ஆட்டோக்கராக இருந்து கோடீஸ்வரனாகிய லாட்டரியில் கிடைத்த 25 கோடி வைத்து புலம்பல். பம்பர் லாட்டரி குலுக்கல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் கேரளாவில் இதை அரசு நடத்தி வருகிறது. கேரளா அரசால் மாத பம்பர் வருட பம்பர் குலுக்கல் மீது பல லாட்டரி குலுக்கல் முறையில் உள்ளன அதில் 5 லட்சம் 12 கோடி வரை பம்பர் குலுக்கல் இருந்தது இந்த வருடம் ஓணம் பம்பர் குலுக்களாக 25 கோடி ரூபாயாக மாற்றப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் இந்த மாதிரி லாட்டரி குலுக்கல் முறையில் 12 கோடி ரூபாய் வரை பெற்றார்.

-விளம்பரம்-

இது போன்ற கேரளா வைத்திருந்த பலரும் பல இனிய மக்களும் இந்த லாட்டரி குலுக்கல் முறையில் நாள் பயனடைந்தாலும் இது ஒரு சூதாட்டம் போன்று தான் கேரளாவில் நடைபெற்ற வருகிறது.இந்த இந்த முறை ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் நடக்கப்பட்ட லாட்டரி பம்பர் குலுக்கல் முறையில் கேரளாவில் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. குழுக்களுக்கு முந்தின நாள் மாலையில் தான் பழங்காவடி பகவதி லாட்டரி ஏஜென்சியிலிருந்து ரூபாய் 500 க்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.

- Advertisement -

தன் மகன் சேமித்து வைத்து உண்டியல் ஒன்றை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கினேன். வெளிநாட்டு செல்வதற்காக கூட்டுறவு வங்கி 5 லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன் இந்த நிலையை 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என்று கூறி விட்டேன் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் திட்டத்தின் முழுதாக தயாரித்து விட்டேன். எனக்கு 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கும் நிலையில் 10% ஏஜென்ட் கமிஷன் ஆகும் 30% கவர்மெண்ட்க்கு வரி போக மீதம் 15 கோடியே 75 லட்சம் கணக்கில் வர வைக்கப்படும். நான் இரண்டு வருடம் கழித்து அந்த பணத்தை வைத்து தொழில் தொடங்க உள்ளேன்.

அந்த பணம் இன்றைக்கு முழுமையாக கிடைக்கவில்லை இந்நிலையில் நிறைய பேர் உதவி என்றும் கடன் கேட்கிறார்கள். எனக்கு நிம்மதி இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். ஓணம் பம்பர் பரிசு கிடைத்த போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது ஆள் கூட்டமும் டிவி கேமராக்கள் யூடியூப் கண்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இப்பொழுது என் சந்தோஷம் எல்லாம் போய்விட்டது. வெளியில் சென்றாள் எந்த இடத்திலும் உதவி கேட்டு நிறைய பேர் தினமும் வருகின்றனர் என் சகோதரி வீட்டுக்கு இப்போது இருக்கிறேன்.

-விளம்பரம்-

என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனை சென்றலும் பின் தொடர்கிறார்கள் சொந்த வீட்டுக்கே செல்ல முடியாத நிலை இப்பொழுது பணம் எனக்கு கிடைத்திருக்க வேண்டாம் என்று நினைக்கின்ற நிலைமைக்கு நான் இப்போது வந்து விட்டேன். என் கையில் இன்னும் பணம் வரவில்லை ஆனாலும் கொஞ்சமாவது பணம் கொடு எனக்கு கடன் கொடு எனக்கு உதவி என்று என்னை தினமும் நிறைய நபர்கள் வந்து சந்திக்கிறார்கள். வீடு மாதிரி சென்றாலும் விடவில்லை. தலைமறைவாக இருக்கின்ற நிலைமைக்கு வந்து விட்டேன்.

இப்பொழுது வீடியோ பேசி இருக்கும்போதே என் வீட்டின் கேட்டை தட்டிக் கொண்டு ஆட்கள் நிற்கிறார்கள் பணம் கேட்டு நிற்கிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் இங்கே நிற்கிறார்கள்.. நானும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்தால் வந்தேன் எனக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் இப்போது எனது நிலைமை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என அனூப் தன் மனவருத்தை தெரிவித்து இருக்கிறார்.இப்பொழுது அனூப் தன் மகனின் உண்டியலை உடைத்து தான் லாட்டரி சீட்டு வாங்கினேன் என்று கூறியது இப்பொழுது ஒரு விவாத பொருளாக மாறி உள்ளது.

Advertisement