“9 நாட்களில் நான் நின்றேன் நடந்தேன்” வீடியோ வைரல் ஆன நிலையில் விளக்கம் அளித்த சிறுவன்.

0
966
- Advertisement -

தினந்தோறும் சமுக வலைதளங்களில் புதுப்புது சர்ச்சைகளும் நகைச்சுவையான செய்திகளும் நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல தான் சில நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் திருச்சபை மேடை ஒன்றில் கூறியது ஒரு தவறான கருத்து தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அந்த சிறுவனின் வீடியோவை சமுக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் மற்றும் அந்த சிறுவனை கிண்டல் செய்யும் வகையிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த சிறுவன் கூறியது:

அச்சிறுவன் கூறுகையில் “நான் என்னுடைய தாயின் கருவறைக்குள் இருந்த போது என்னுடைய தாயிடம் உங்களுக்கு கருவறையில் ஆண் ஒரு குழந்தை உள்ளது ஆனால் அந்த குழந்தை உயிருடன் பிறக்காது என்று மருத்துவர்கள் எனது அம்மாவிடம் கூறியிருந்தார்.கள். உங்களுக்கு குழந்தை பிறந்தால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டுமே ஆனால் அந்த குழந்தையை கொன்று விட வேண்டும் என்று கூறினார்கள்.

- Advertisement -

உழியத்திற்கு ஒப்பு கொடுத்தனர் :

இந்த சூழ்நிலையில் அந்த நேரத்தில் அம்மாவும் அப்பாவும் கைகளை கோர்த்து ஆண்டவரிடம் வேண்டினார்கள். நீங்க தருவேன்னு சொன்னிர்கள் நீங்கள் தந்தால் நான் என் குழந்தையை உழியத்திற்கு ஒப்பு கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். அது போலவே தேவன் தந்தார்.ஆப்ரேஷன் தியேட்டர் போன உடனே நீங்கள் குழந்தையை பெற்று கொள்ளலாம் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள்.”

இது வரை அந்த சிறுவன் கூறியது ஏற்றுகொள்வது போல தான் இருந்தது ஆனால் அதன் பிறகு கூறியது தான் அனைவரையும் திக்குமுக்கு ஆக்கியது.மேலும் கூறிய அந்த சிறுவன் “ நான் பிறக்கும்போதே 5 கிலோ எடையுடன் பிறந்ததாக என் அம்மா சொன்னார். நான் பிறக்கவே மாட்டேன் என்று சொன்னார்கள் ஆனால் நான் 5 கிலோ உடன் பிறந்தேன். பிறந்த 9 நாட்களில் நின்ற ஒரே  குழந்தை நான் தான் என்று கூறினார்.

-விளம்பரம்-

சிறுவனின் விளக்கம்

என்னை தேவனுக்கு ஒப்பு கொடுத்ததால் 9 நாட்களில் நானே நிற்பேன் நானே நடப்பேன் நானே கழிவறைக்கு செல்வேன் நானே உட்காருவேன் நானே உறங்குவேன் நானே நாற்காலியில் ஏறி உட்காருவேன் அந்த அளவிற்கு தேவன் கிருபை செய்தார் என்றும் கூறினார். இதனை சமுக வலைதளங்களில் தீயாய் பரவி எண்ணி நகையாடி வந்தனர்.அந்த சிறுவன் கூறுகையில் “ சில நாட்களுக்கு முன்பாக நான் ஒரு இடத்தில் செய்தி சொல்ல சென்று இருந்தேன்.

அந்த இடத்தில் என்னுடைய செய்தியை கூறும்போது என்னுடைய பிறப்பு பற்றி பகிர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் நான் 9 நாளில் நடந்தேன் என்று தவறாக கூறினேன். 9 மாதம் என்பதற்கு பதிலாக 9 நாட்கள் என்று கூறிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த இரு வீடியோகளும் தான் இணையத்தில் பரவி வருகிறது.                      

Advertisement