குணசேகரனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு எதிர் நீச்சல் தொடரில் கோலங்கள் சீரியல் வில்லனை களமிறக்கியுள்ள திருச்செல்வம்

0
3772
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக போலீஸ் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். மேலும், இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் திருச்செல்வம், ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

சீரியலின் கதை:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் வீட்டுப் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார்.

-விளம்பரம்-

குணசேகரன் திட்டம்:

மேலும், வீட்டையும் ஜீவானந்தம் கைப்பற்ற போகிறார் என்று சொன்னதைக் கேட்டு குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கிறார். பின் குணசேகரனனுக்கு வலது புறம் கை செயலிழந்து விட்டது. ஜீவானந்தத்தை பழிவாங்க குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து சென்னைக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் போலீசாக இருக்கும் ரவுடியை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கோலங்கள் தில்லை என்ட்ரி:

இந்த நிலையில் ஆதி குணசேகரன் சந்திக்க செல்லும் அந்த போலீஸ் ரவுடி குறித்த தகவல்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லைங்க, கோலங்கள் சீரியலில் வந்த தில்லை தான். எதிர்நீச்சல் சீரியலிலும் அவர் போலீஸ் ரவுடியாகவே நடித்து இருக்கிறார். கோலங்கள் சீரியலில் இவருடைய பாடி லாங்குவேஜ், வசனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement