உங்களுக்கு அறிவே இல்லையா? தடையை மீறி வெளியே செல்பவர்களை வெளுத்து வாங்கிய மானஸ்வி.

0
2994
manasvi
- Advertisement -

உலகையே அச்சுறுத்தி வரு கொரோனா வைரஸால் தற்போது வரை இந்தியாவில் இந்த கொடிய நோய்க்கு இதுவரை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் இதுவரை 13 பேர் இந்த கொடிய நோயினால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 27 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை இந்த நோயினால் ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்த நோய் பரவாமல் இருக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

-விளம்பரம்-
Image result for manasvi nayanthara

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

மேலும், இந்த முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய் கறிகள், பால், மருந்து என்று அத்யாவசிய பொருளை வாங்க மட்டும் இருவர் அல்லது ஒருவர் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பலரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கூட்டம் கூட்டாக வெளியில் சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் அது போன்ற ஆட்களுக்கு குழந்தை நட்சத்திரமான மானஸ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பேபி மானஸ்வி. அந்த படத்திற்கு சுந்தர் சியின் இருட்டு போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார்.

இந்த நிலையில் மானஸ்வி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா டீவியில் பத்திரிகையில் என்று எல்லாரும் சொல்கிறார்களே ஒருமுறை சொன்னால் நீங்கள் கேட்கவே மாட்டீர்களா. நீங்கள் எங்கேயாவது வெளியே போய் பின்னர் அந்த நோய் தொற்றிக் கொண்டு வந்து விடுவீர்கள். அது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும். நீங்கள் வெளியே போகாமல் இருந்தால் தானே எல்லோருமே வெளியில் செல்ல முடியும். நீங்கள் வெளியே செல்லாமல் இருந்தால் தான் கொரோனா குறையும் .

அப்போது தான் எல்லாரும் வெளியில் செல்ல முடியும். அதை விட்டுவிட்டு நீங்கள் மனசுக்குள்ளேயே ஒருவன் என்று வேண்டிக் கொண்டால் ஒருவன் போய்விடாது நீங்கள் வெளியில் செல்லாமல் இருந்தால் கண்டிப்பாக குறையும். உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? எங்களை போல குழந்தைகளுக்கு தெரிகிறது உங்களுக்கு தெரியாதா என்று வெளுத்து வாங்கியுள்ளார் மானஸ்வி.

Advertisement