‘இல்லைன்னா இப்படி தான் அலையனும்”2000ரூ நோட்டால் அரசு ஊழியர்களிடம் கொந்தளித்த கோதண்டம்.

0
1420
- Advertisement -

மின்சார துறை அலுவலகத்தில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் சின்னத்திரை நடிகர் கோதண்டம் ஆவேசமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தான். நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. காரணம், கருப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது. அதில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகக் கூடாது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மே மாதம் 23ஆம் தேதி வங்கிகளில் கொடுத்து கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். அதிகபட்சமாக 26 லட்சம் வரை 2000 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். இதற்கு மேல் மாற்ற முடியாது என்று கூறி இருக்கிறது.

- Advertisement -

ரிசர்வ் வங்கி அறிக்கை:

அது மட்டும் இல்லாமல் ஒரு நாளைக்கு 10 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20,000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும். இதுவும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே மாற்ற அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த நோட்டுகளை ஒரு நபர் 127 நாட்களில் அதிகபட்சமாக 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்று கூறி இருக்கிறது. இதற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் கோதண்டம் அவர்கள் மின்சார வாரியத்தில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்திருக்கிறார்.

ஆவேசத்தில் கோதண்டம்:

ஆனால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அதை வாங்க மறுத்து இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த கோதண்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதோடு டாஸ்மாக் கடையில் 2000 ரூபாய் மாற்றிக் கொள்ளலாம் என மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கோதண்டம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் மின்சார வாரியத்தில் 2000 ரூபாய் நோட்டு கொடுத்தேன். அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். வங்கியில் தான் மாத்தணும் என்று சொல்கிறார்கள். இதுதான் இப்ப நடக்கிறது.

-விளம்பரம்-

கோதண்டம் வெளியிட்ட வீடியோ:

ஜனநாயக நாட்டில் அரசு அலுவலகத்திலேயே 2000 ரூபாய் நோட்டு வாங்க வில்லை. இது மன வேதனையாக இருக்கிறது. இதனால் நான் அங்கு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். பின் சிறிது நேரத்தில் அங்கிருந்த அலுவலர் ஒருவர் உயர் அதிகாரியிடம் செல்போனில் பேசுகிறார். அதற்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டை வாங்கிக் கொள்கிறார்கள். நான் வாக்குவாதம் செய்த பிறகு தான் ஒரு நோட்டை மாற்றி இருக்கிறார்கள். இந்திய நாட்டிலுள்ள அரசு அலுவலகத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றக்கூடாது என கூறுகிறார்கள்.

2000 ரூபாய் விவகாரம்:

பாமர மக்கள் கையில் இருப்பது 1,2 நோட்டு தான். எங்களுக்கு கூலியாக கொடுப்பதும் இதை மட்டும்தான். வங்கியில் மாற்றிக்கொள் என்று சொல்கிறார்கள். இதற்காகத்தான் நான் வங்கிக்கு போகணுமா? நான் தனியார் அலுவலகத்தில் கொடுத்தால் கூட சரி. அவர்களே வாங்கி கொள்கிறார்கள். ஆனால், அரசு அலுவலகத்தில் வாங்க மறுக்கிறார்கள். இதுதான் நாட்டின் நிலைமை. என்னை போல் யாராவது 2000 ரூபாய் வைத்திருந்தால் இப்படிதான் கஷ்டப்படணும் என்று கூறியிருக்கிறார். இப்படி கோதண்டம் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு சிலர் ஆதரவாக தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement