தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. சமந்தா, தனுஷ், இமான் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலமான நபர்கள் சமீபத்தில் தங்களின் விவாகரத்து குறித்து அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான பாலா தன் மனைவியை விவகாரத்து செய்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார்.
பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, இவருடைய கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
பாலாவின் வெற்றிப்படங்கள் :
இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதோடு இவர் இயக்கிய முதல் படமே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு இவர் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பாலா அவர்கள் பொதுவாக சினிமா துறையில் மிக கோபமாக, டெரராக இருப்பார் என்று தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால், இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச் சுவையான மனிதர் என்று அவருடைய நண்பர்கள் சொல்வார்கள்.
மனைவியை பிரிந்த பாலா :
இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 உலக அளவிலான விருதுகளையும் பெற்று உள்ளது. இதனிடையே இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாலா தன் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பாலா விவாகரத்து குறித்து எழும் சர்ச்சை:
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதன் மூலம் தன் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார் பாலா. மேலும், இவர்களின் விவாகரத்து குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் இவர்களுடைய விவாகரத்து காரணம் பாலாவின் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர்களின் பிரிவிற்கான காரணத்தை தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,
முத்துமலர் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அளித்த பேட்டி:
எம்பி ஒருவர் உடன் பாலாவின் மனைவிக்கு தொடர்பு இருக்கிறது. அந்த காரணத்தினால் தான் பாலா அவரை பிரிந்தார். எனக்கு கிடைத்த தகவலின்படி எம்பி உடன் நான்கு ஆண்டுகளாக முத்துமலர் தொடர்பில் இருந்திருக்கிறார். அவருடன் முதுமலர் அடிக்கடி டெல்லி சென்று அங்கு அவருடன் தங்கி வந்ததாகவும் இதை பாலா பலமுறை கண்டித்தும் இருக்கிறார். ஆனால், முத்துமலர் கேட்கவில்லை. இது ரொம்ப தவறான ஒன்று. அதற்கு பிறகு தான் பாலா மனம் நொந்து பிரிந்து விட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி சோஷியல் மீடியாவில் கே ராஜன் அவர்கள் முத்து மலரை பற்றியும் ஒரு எம்பி பற்றியும் கூறியிருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கே ராஜன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.