மணிமேகலை பதிவில் போட்ட கமெண்டை டெலீட் செய்தது ஏன்? குரேஷி விளக்கம்

0
346
- Advertisement -

மணிமேகலை போட்ட பதிவிற்கு ரிப்ளை செய்து பின் அதை டெலிட் செய்தது குறித்து குரேஷி தற்போது விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில வாரமாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:

இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். ஆனால், சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார்.

குரேஷி வீடியோ:

அதில் அவர், ஒரு எபிசோடில் மணிமேகலை குறுக்கே வந்து, நீங்க பேச வேண்டாம் பிரியங்கா. ஏற்கனவே வெளியே எல்லாம் நீங்கதான் தொகுப்பாளினி என்ற மாதிரி பேசுறாங்க அப்படின்னு சொன்ன உடனே பிரியங்கா ஷாக் ஆயிட்டாங்க. அங்கு இருந்து தான் இந்த ப்ரச்சனை தொடங்கிச்சு. இதை மணிமேகலை-பிரியங்கா இரண்டு பேருமே பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயம். மணி அவரசப்பட்டு வெளியே போயிட்டாங்க என்று ப்ரியங்காவுக்கு குரல் கொடுத்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பதிவை டெலிட் செய்த குரேஷி:

இந்நிலையில் மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது தொடர்பாக போட்ட பதிவிற்கு ஆதரவாக குரேஷி பதிவு ஒன்று போட்டிருந்தார். பின் திடீரென்று அந்த பதிவை குரேஷி டெலிட் செய்தும் விட்டார். இது குறித்து நெட்டிசன்கள் பல கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் குரேஷி. அதில் அவர், மணிமேகலை எனக்கு ஒரு நல்ல தோழி. அவர் ஏதோ ஒரு முடிவெடுத்து விட்டார். அவர்களுடைய அடுத்தடுத்த முடிவிற்கு வாழ்த்துக்கள் என்று தான் நான் அந்த பதிவை போட்டேன்.

குரேஷி விளக்கம்:

அதை ஒரு பாசிட்டிவாக தான் நான் போட்டேன். ஆனால், அதை பார்த்து பலருமே, நீ என்ன ஜால்ராவா? நீ பிரியங்கா ஆளா? என்றெல்லாம் மோசமாக திட்டியும் விமர்சனங்களையும் போட்டிருந்தார்கள். அதற்கு தான் டெலிட் செய்து விட்டேன். மற்றபடி நானும் மணிமேகலையும் இன்ஸ்டாவில் பாலோ செய்வது கூட கிடையாது. காரணம், எங்கள் இரண்டு பேரிடமும் நம்பர் இருப்பதால் எதுவாக இருந்தாலும் நாங்கள் நேரடியாக போன் செய்து பேசிக் கொள்ளுவோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement