-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

வெங்கடேஷ் பட் புதிய நிகழ்ச்சிக்கு ஆதரவா? குக்கு வித் கோமாளியில் இருந்து குரேஷியும் போறாரா?

0
162

விஜய் தொலைக்காட்சியில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி இருந்தார்கள். அதற்கு ஏற்ப நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தயாரிப்பு நிறுவனம் Media Masons 10 விலகி விட்டது. இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபனும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

குக் வித் கோமாளி:

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் உடனுக்குடன் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதனை அடுத்து சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரொமோட் சூட் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

View this post on Instagram
-விளம்பரம்-

A post shared by Venkatesh Bhat S (@chefvenkateshbhat)

குக் வித் கோமாளி சீசன் 5:

இதற்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் நிகழ்ச்சி ஆரம்பிக்க போகிறார்கள். மேலும், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ் பாண்டே, அக்ஷய் கமல் ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்க இருக்கிறார்கள். அதேபோல் நடிகை ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் ஆகிய புது கோமாளிகளாகவும் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்கள். இவர்களை அடுத்து மற்ற போட்டிகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த சீசனில் மணிமேகலை, ரக்ஷன் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெங்கடேஷ் பட் பதிவு:

இந்த நிலையில் வெங்கடேஷ் பட் அவர்கள் புது நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருக்கிறார். இது தொடர்பாக இவர், சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று நீங்களே சொல்லிட்டீங்க, ஆரம்பிக்கலாமா என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அவர் எந்த சேனலில்? எந்த நிகழ்ச்சியில்? வர போகிறார் என்பது தெரியவில்லை. இதை பார்த்த குரேஷி, சரியா சொன்னீங்க சார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் கருத்து தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.

குரேஷி விளக்கம்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக வெங்கடேஷ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகிறார். அதற்கு ஆதரவாக குரேஷி சொல்வது தவறு என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து குரேஷி பேட்டியில், பட் சார் அவருடைய சோசியல் மீடியாவில் போட்டிருந்த பதிவிற்கு தான் நான் சாதாரணமாக கமெண்ட் போட்டேன். அதை வைத்து எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. எனக்கும் பட் சாருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது. அதனால் அவருடைய முயற்சிக்கு வாழ்த்து சொன்னேன். இது ஒரு தப்பா? விஜய் டிவியே இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது எழுதணும் என்று செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் நான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news