மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி போன்ற காட்சிகளுக்கு சத்தம் போட்டுக் கொண்டிருந்த பா.ஜ.க வினைத் தாண்டி மெர்சல் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விசயமாகும்.
படத்தில் சிங்கப்பூரில் குறைந்த ஜி.எஸ்.டி வரியை வைத்தே சரியான தரமான மருத்துவத்தை தருவதாக கூறியதற்கும், கோவில் இடத்தில் மக்களுக்கு பயன்பட மருத்துவமனை கட்டலாம் எனக் கூறியதற்கும் ‘தாட்-பூட் தஞ்சாவூர்’ எனக் குதித்துக் கொண்டிருந்தது தமிழக பாரதிய ஜனதா கட்சி. இதற்க்காக விஜயை ஜோசப் விஜய் எனக்கூறி பிரிவினையையும் ஏற்ப்படுத்து வந்தார் ஹெச்.ராஜா சர்மா.
ஆனால், அதே திரைப்படத்துல் வடிவேலு ஒரு இடத்தில் பணம் கேட்கும் போது, ‘நோ மணி, ஒன்லி டிஜிட்டல் மணி’ எனக் கூறுவார். இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சித்தாக இல்லையா? ஏன் அவரை ஏதும் கேட்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு அவரை கோர்த்துவிட்டுள்ளார்.
விஜய் என்றால மட்டும் தான கேட்பர்களா, ஏன் வடிவேலுவை கேட்கவில்லை எனக் கூறி சூசகமாக அவரையும் கோர்த்துவிட்டுள்ளார் குஷ்பூ