தனது முதல் படத்திற்கு முன்பாக குஷ்பு எடுத்த புகைப்படம். அவரே வெளியிட்ட அறிய புகைப்படம்.

0
5986
kushboo
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80,90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பின் நடிகை குஷ்பு அவர்கள் 1988 ஆம் ஆண்டு ‘தர்மத்தின் தலைவன்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். மேலும், இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

-விளம்பரம்-

இவருடைய அழகிற்கும், நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குஷ்பு அவர்கள் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள்.

- Advertisement -

தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் குஷ்பூ அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பு அவர்கள் தமிழ் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு அதாவது 1987 ல் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலை, சமையல் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், வீட்டில் இருப்பதால் தங்களுடைய பழைய புகைப்படங்களை எல்லாம் பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பு அவர்கள் 1987 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ அவர்கள் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement