மோனிகா சொல்றது சுத்தப்பொய் – எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் பேசிய குட்டி பத்மினி

0
611
- Advertisement -

இமானின் முன்னாள் மனைவி சொல்வதெல்லாம் பொய் என்று நடிகை குட்டி பத்மினி பகிர்ந்து இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

மோனிகா அளித்த பேட்டி:

அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள். பின் இது குறித்து இமான் முதல் நிலையில் மோனிகா ரிச்சர்ட், சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர் தான். ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.

இமான் குறித்து சொன்னது:

அவர் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து எல்லாம் பண்ணி வைத்திருந்தார். ஒரு குடும்பம் சிதறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், நாங்கள் ஒற்றுமையாக வாழனும் என்று நினைத்து தான் சமாதானம் செய்ய சிவா முயற்சிகளை எடுத்தார். அது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள். இமான் எனக்கு எந்த ஒரு ஜீவனாம்சமும் கொடுக்கவில்லை. காசு வேணுமா? பிள்ளைகள் வேண்டுமா? என்று கேட்டார்கள்.

-விளம்பரம்-

நடிகை குட்டி பத்மினி வீடியோ:

எனக்கு பிள்ளைகள் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு எந்த ஜீவனாம்சமும் வாங்காமல் வந்துவிட்டேன் என்று கூறி இருந்தார். இந்நிலையில் இது குறித்து நடிகை குட்டி பத்மினி அவர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இமான் வீட்டிற்கும் எங்களுக்கும் நிறைய நெருக்கம் இருக்கிறது. இமான்
என்னிடம் ஒரு அம்மாவைப் போலத்தான் பழகுவார். ஆனால், மோனிகா ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்து கொண்டிருக்கிறார்.

மோனிகா-இமான் குறித்து சொன்னது:

இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார். அதோடு இமானும் அவருடைய தந்தையும் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது நடந்த சம்பவங்கள், அவர்களுக்குள் இருக்கும் சோகங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து இருந்தார்கள். இப்போது இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் அமலி என்ற பெண்ணை நாங்கள் தான் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். விவாகரத்துக்கு பிறகு அமலியை கல்யாணம் செய்ய, அவரை புரிந்து கொள்வதற்காக தான் ஒரு வருடம் அமலியோடு இமான் பழகி வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் பழகி வந்தது கூட விவாகரத்திற்கு பிறகு தான் என்று கூறியிருந்தார்.

Advertisement