Kalakshetra பிரச்னைய சாதிய பிரச்னையா மாத்திட்டாங்க, இதுக்கு என்ன Proff ஆ குடுக்க முடியும் – அபிராமிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேச பதிலடி.

0
657
lakshmiramakrishnan
- Advertisement -

காலக்ஷேத்ரா விவாகாரத்தில் அபிராமி தொடர்ந்து கல்லூரி நிர்வாகதிற்கு ஆதரவாகவும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் அபிராமியை விமர்சித்து உள்ளார். சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது.

-விளம்பரம்-

இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அபிராமி இப்படி காலக்ஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் கண்டித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை சனம் செட்டி, நடிகை மற்றும் மருத்துவரான ஷர்மிளா போன்ற பல இந்த விவாகரத்தில் அபிராமியை விமர்சித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவரிடம் கலாக்ஷேத்ரா விவகாரத்தில் அபிராமியின் நிலைபாடு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘இங்கு ஒரு பிரச்சனை என்றாலே அதில் ஜாதி முன்னாள் வந்து நிற்கிறது. ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்டாலே அவர்கள் என்ன ஜாதி என்பதை பார்ப்பதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். நாம் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது எங்கேயோ ஒரு குழந்தையோ ஒரு பெண்ணோ பாலியல் தொழில் பொருட்களுக்கு ஆளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி ஜாதி என்ற ஒரு வக்கிரம் நம் சமுதாயத்திற்கு வந்திருக்கிறது. இது மிகவும் தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்.இதற்கெல்லாம் proof-ஆ கொடுக்க முடியும். ஒரு பெண் குழந்தை ஸ்கூலில் இவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொல்லும்போது அங்கு என்ன நடந்திருக்கிறது என்று அந்தக் குழந்தைக்கு மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் proof ஆ கொடுக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement