லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு – உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு. முழு விவரம் இதோ.

0
1442
- Advertisement -

கோச்சடையான் படத்தின் பண மோசடி வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் மீது தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் நடித்த படங்களில் ஒன்று தான் கோச்சடையான். ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014ஆம் மகள் வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஷோபனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் பாணியில் உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

- Advertisement -

கோச்சடையான் படம்:

பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படம் சுமாரான வசூலை அள்ளியது என்று சொல்லலாம். பெரும்பொருட்செலவில் உருவான கோச்சடையான் படம் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த படத்தை தயாரித்த மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் ‘ஆட் பியூரோ’ என்ற நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பணம் தொடர்பான விஷயம் குறித்து 2014-ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இதனை அடுத்து மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பெங்களூரில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் புகார் அளித்து இருந்தது. மேலும், இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மூலம் போடப்பட்ட உத்தரவை நீக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. அதோடு கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இருந்தது.

-விளம்பரம்-

நீதிமன்றம் தீர்ப்பு:

இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதி வழங்கியது. பின் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என குற்றச்சாட்டுகளை ரஜனிகாந்த் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் தொடரப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கோச்சடையான் படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து லதா ரஜினிகாந்த்துக்கு விலக்கு அளித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

மீண்டும் வழக்கில் சிக்கிய லதா:

இந்த நிலையில் மீண்டும் பண மோசடி வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் மீது புகார் எழுந்திருக்கிறது. அதாவது, பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கோச்சடையான் படத்திற்கு கடன் அளித்த ‘ஆட் பியூரோ’ நிறுவனம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இதனை எடுத்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement