லியோ காட்சிகள் ரத்து – திரையரங்கு ஊழியர்களுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதம் – மூன்றாம் நாளே இப்படியா?

0
411
- Advertisement -

லியோ காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் திரையரங்கு ஊழியர்களுடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 4 மணி மற்றும் 5 மணிக்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

- Advertisement -

லியோ படம்:

இந்த நிலையில் லியோ படம் ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் தான் வைலாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 20 தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் அடிப்படையில் படம் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி முன்னிட்டு விடுமுறை விட்டிருப்பதால் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியிருக்கிறது. சிலர் ஆன்லைன் மூலமாகவும், சிலர் நேரடியாகவும் டிக்கெட்களை புக் செய்து இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ரசிகர்கள்:

இந்த நிலையில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் லியோ திரைப்படம் பார்க்க நேற்று காலை 9 மணி காட்சிக்கு ரசிகர்கள் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வந்து டிக்கெட் எடுத்து இருக்கின்றனர். ஆனால், ஒன்பது மணி ஆகியும் ரசிகர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி கதவை திறந்து உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் தியேட்டர் மிஷின் பழுதாகி இருப்பதால் லியோ காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தியேட்டர் ஊழியர்கள் அறிவித்தனர். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் சொன்ன அறிவுரை:

இதனால் திரையரங்கு வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். ரசிகர்கள் நாங்கள் செல்ல மாட்டோம், லியோ படம் பார்த்து தான் செல்வோம் என்று கூச்சல் போட்டி இருக்கிறார்கள். பின் போலீசார், மிஷின் பழுதானதால் இன்று காட்சிகள் வெளியிட முடியாது. உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் பணம் கிடைக்கும்.

ரசிகர்கள் கோரிக்கை:

தியேட்டரில் வந்து டிக்கெட் எடுத்தவர்களுக்கு உங்களுடைய பணத்தை கையில் வாங்கிக் கொள்ளுங்கள். பிரச்சனை செய்ய வேண்டாம், அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் எங்களுக்கு இரண்டு மடங்கு பணம் வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனே போலீசார், அப்படியெல்லாம் தர முடியாது உங்களுக்கான பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் வேறு வழியில்லாமல் போலீசார் சொன்னதை கேட்டு பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பி சென்று இருக்கிறார்கள்.

Advertisement