இதுக்கு எதுக்கு டிக்கெட் விக்கனும் – சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் ரசிகர்கள் ஆவேசம்.

0
1897
- Advertisement -

சென்னையில் உள்ள திரையரங்கில் லியோ படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய சென்ற விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு லியோ படம் இதுவரை ரிலீசுக்கு முன்பு 28 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் USA-வில் மட்டும் இதுவரை $ 910K வசூல் செய்திருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை.

-விளம்பரம்-

காசி திரையரங்கம் சர்ச்சை:

இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள காசி திரையரங்கம் சார்பில் அதன் எக்ஸ் தளத்தில் இன்று பிற்பகல் 12 மணி முதல் தியேட்டரில் உள்ள டிக்கெட் கவுண்டரில் லியோ படத்திற்க்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள். இதை அடுத்து ரசிகர்கள் லியோ படத்தின் டிக்கெட்டுகளை வாங்க தியேட்டருக்கு சென்றிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் விஜய் ரசிகர்கள்:

பின் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் வரிசையிலும் காத்திருந்தார்கள். ஆனால், அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்களுக்கு டிக்கெட் ஹவுஸ்புல் ஆகிவிட்டது என்று போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் கூட வாங்காமல் எப்படி ஹவுஸ்புல் போர்டு வைக்கலாம் என்று ரசிகர்கள் கடுப்பாகி தியேட்டர் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து தியேட்டர் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். திரையரங்கிற்கு வந்த போலீசார் ரசிகர்களை சமாதானப்படுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் காசி திரையரங்கம் முன்பு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement