உத்தமவில்லன் படத்தை Cult படம் ரேஞ்சுக்கு முட்டுக்கொடுத்த ரசிகர்கள் – படத்தால் ஏற்பட்ட நிஷ்டம் குறித்து புலம்பிய லிங்குசாமி

0
156
- Advertisement -

கமலின் உத்தமவில்லன் படத்தால் தனக்கு நேர்ந்த நஷ்டம் குறித்து ஓப்பனாக பேசி இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார்.

- Advertisement -

இந்த படமும் பெரும் தோல்வியை சந்தித்தது. லிங்குசாமி இயக்குனர் என்பதை தாண்டி திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் தயாரித்த உத்தமவில்லன் படத்தை பண்ண வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் கமல்ஹாசன் இந்த படத்தை பண்ணுவதில் உறுதியாக இருந்தார் என்றும் படத்தை எடுத்து முடித்து பின்னர் பார்த்தபோது,படத்தில் நாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்துவதாக கமல் சொன்னதாகவும் கடைசியில் அப்படியே வெளியிட்டார்.

இது தான் உத்தம வில்லன் படம் படுதோல்வியை சந்திக்க காரணம்என்று இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் உத்தமவில்லன் படம் தோல்விக்கு காரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் ”உத்தம வில்லன்’ எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திய படமாகும்’ என்று குறிபிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த அறிக்கையில் ‘தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் திரு. கமலஹாசன் அவர்களை வைத்து first copy (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான ‘உத்தம வில்லன்’ எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திய படமாகும்.

இது திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு. சந்திரஹாசன்அவர்களும் மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலையில் சமூக வலைத்தளமான வலைப்பேச்சு என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது இதுபோன்று தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்

Advertisement