இந்த மூணு காரணத்தினால் தான் நடிக்க ஒத்துக்கொண்டேன் – லோகேஷ் அளித்த பளீச் பதில்

0
418
- Advertisement -

இந்த மூன்று காரணத்தினால் தான் ஆல்பம் பாட்டில் நடிக்க ஒத்துக் கொண்டேன் என்று லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் லோகேஷ் கனகராஜின் ஆல்பம் சாங் குறித்த செய்திகள் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தும், பாடலை கம்போஸ் செய்தும் இருக்கிறார். இந்த பாடல் வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார். அதோடு இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. நேற்று தான் இந்த பாடல் வெளியாகி காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

லோகேஷ் பேட்டி:

இந்நிலையில் இந்த ஆல்பம் பாடல் வெளியீடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், முதலில் இந்தப் பாடலுக்கு என்னை நடிக்க கூப்பிட்ட போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் டீம் வந்து எனக்கு ஐடியா சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதம் எனக்கு பிடித்ததால் இந்த பாடலை பண்ணலாம் என்று தோன்றியது. நான் கமல் சார் பற்றி தான் என்னுடைய கேரியரில் ரொம்ப அதிகமாக பேசி இருக்கிறேன்.

-விளம்பரம்-

நடிப்பு குறித்து சொன்னது:

நான் வருகிற ஒரு காட்சியில் அவருடைய குரல் வருகிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இயக்கத்தை விட நடிப்பு எளிமையாக தான் இருக்கு. எனக்கு நடிக்கணும் என்று ஆசை எல்லாம் இல்லை. அப்படியான ஆசை எனக்கு இருந்தால் எனக்கு பிடித்த பொல்லாதவன் படம் மாதிரி ஒரு கதை பண்ணி என் அசிஸ்டன்ட் இடம் கொடுத்து நடிப்பேன். ஆனால், அப்படி எல்லாம் ஆசை இல்லை. மேலும், இந்தப் பாடலில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு மூன்று காரணம் இருக்கிறது.

ஆல்பம் பாடலில் நடிக்க காரணம்:

ஒன்று கண்டிப்பாக கமல் சார். இரண்டு ஸ்ருதி. அவர்கள் டீமுடன் பார்த்த வேலை பிடித்தது. மூன்று நாட்களில் ஷூட்டிங் முடிந்து விடும் என்றார்கள். இந்த காரணத்தினால் தான் நான் இந்தப் பாடலில் நடிக்க ஒத்துக் கொண்டேன். கூடிய விரைவில் ரஜினி சார் உடைய படத்தின் வேலைகளில் இறங்க இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். மேலும், இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இயக்குனரானார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார்.

Lokesh

லோகேஷ் இயக்கும் படம்:

அதன் பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை என்ற இயக்கி இருக்கிறார் லோகேஷ். இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்டுகான வேலையில் தான் லோகேஷ் பிஸியாக இருக்கிறார்.

Advertisement