உதயநிதி பட விழாவில் லவ் டுடே இயக்குனருக்கு கிடைத்த மாஸ் – பதறிப்போய் அவர் சொன்ன வார்த்தை.

0
500
pradeep
- Advertisement -

உதயநிதி படத்தின் விழாவில் லவ் டுடே பட இயக்குனர் பேசும் போது ரசிகர்கள் ஆராவாரம் செய்த நிலையில் பிரதீப் ஒரு கனம் பதறி போய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. ஒரு அறிமுக ஹீரோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பிரதீப் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலக தலைவன்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் ‘கழக தலைவன்’

இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். அருண் விஜய் நடித்த தடையற தாக்க ஆர்யா நடித்த மீகாமன் மற்றும் மீண்டும் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் போன்ற படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இயக்குனர் செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் இயக்கிய அனைத்து படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. தடம் படத்திற்கு பின்னர் தற்போது உதயநிதியை வைத்து ‘கலக தலைவன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை உள்ள சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அருண் ராஜா காமராஜ், மிஸ்கின் மாறி செல்வராஜ், போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதீப் பேசும் போது அரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்தார்கள். இதனால் கொஞ்சம் பதறிய பிரதீப் ‘மாட்டி விட்றாதீங்க போதும், இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன், முடித்து விடாதீர்கள் என்று தன்னுடைய பாணியில் ரசிகர்களிடம் கூறினார். ஒரு அறிமுக ஹீரோ பிரதீப்பிற்கு எவ்வளவு வாராவாரம் கிடைப்பதை பார்த்து மேடையில் அமர்ந்திருந்த மிஷ்கின் மாரி செல்வராஜ் ஆகியோர் ஒரு கணம் வியந்து போனார்கள்’

Advertisement