4 மாதத்தில் குழந்தை பெற்ற நயன் ? விதிகளை மீறினாரா ? DMSமூலம் விசாரிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்.

0
387
nayanthara
- Advertisement -

நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பது குறித்த எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் சுப்பிரமணியம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்:

இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் இரட்டை குழந்தை குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அமைச்சர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி:

இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியிடம் அளித்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, இன்று அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவரிடம் நயன்-விக்கியின் இரட்டை குழந்தை குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் கூறியிருந்தது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது குறித்த சர்ச்சை அதிகமாகத்தான் இருக்கிறது.

வாடகை தாய் குழந்தை குறித்து சொன்னது:

21 வயது முதல் 36 வயதுக்குள் இருப்பவர்கள் பெற்றோர்கள், கணவரின் அனுமதியுடன் கருமுட்டையை வாடைக்கு கொடுக்கலாம். இது விதிமுறைக்குட்பட்டிருக்கிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதாக கூட இருக்கலாம். இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் குழந்தை பெற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்த பிறகு தான் தெரியும் என்று கூறியிருந்தார்.

Advertisement