ஒரு வார்த்தை கூட பேசவில்லை இருந்தும் கீர்த்தி சுரேஷை விட வைரலான கதாபாத்திரம் – நன்றி தெரிவித்த மாமன்னன் நடிகை.

0
4243
Maamannan
- Advertisement -

மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாஸிலின் கதாபாத்திரம் வைரலாகி வரும் அதே சமயத்தில் இந்த படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவியும் வைரலானார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துஇருந்தனர். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும்.

அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். பஹத் பாஸில் கதாபாத்திரம் போல அவருக்கு மனைவியாக நடித்த ரவீனாவும் வைரலாகி வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற ‘நன்றி சொல்ல உனக்கு’ பாடலை போட்டு இவரது கிளிப்பிங் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ரவீனா ‘இந்தக்கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போது என்னுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி. இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு நன்றி.

கடந்த மூன்று நாளாக வந்த மீம்களையும், எடிட் செய்து வெளியிடப்பட்ட வீடியோக்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் கமிட் ஆகும் போது படத்தில் எனக்கு வசனங்கள் இல்லாததும், குறைவான ஸ்கீரின் ஸ்பெஸூம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தேன். நான் நினைத்ததை உங்கள் அன்பு சரி என்று நிரூபித்து விட்டது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement