மாநாடு படத்தின் போது ஏற்பட்ட அடி. காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர். சிம்பு படத்திற்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. புகைப்படம் இதோ.

0
620
karuna
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது. பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதுகுறித்து விசாரிக்கபட்டுள்ள போது, நடிகர் கருணாகரன் மாநாடு படத்தின் படப்பிடிப்பின்போது பலமுறை காலில் அடிபட்டு இருக்கிறது. பின்னர் அவர் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு மூட்டு விலகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் நடிகர் கருணாகரன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இருக்கிறாராம்.

-விளம்பரம்-
Advertisement