மாரி படம் நடிகர் கோபி அவர்கள் மைம் கலையில் தற்போது டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் டாக்டர் பட்டம் பெற்ற புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் துணை கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் மைம் கோபி. இவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு மைம் கலையில் புகழ் பெற்ற நடிகராக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.
அதில் அவர் தன்னுடைய மைம் கலையைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிறது என்று காட்டுவது தான் மைம். மைம் என்பது உலக மொழி என்று பொருள். உலகில் மனிதன் எப்போது தோன்றினானோ அப்போது மைம் தோன்றியது. மாலிக் என்பவர் தான் எங்களுடைய வாத்தியார். முதலில் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் தான் எங்களுடைய மைம் கலையை ஆரம்பித்தோம்.
இதையும் பாருங்க : நீச்சல் உடையில் குளு குளு வீடியோவை வெளியிட்ட ஹன்சிகா – எவ்ளோ ஸ்டாக் இருக்கோ.
பிறகு கல்லூரியில் படிக்கும்போது தொடர்ந்து முறையான பயிற்சியை பண்ண ஆரம்பித்தோம். மைம் என்பது மிகவும் மெதுவானது. அதை ஏன் வேகமாக கூடாது என்று நாங்கள் யோசித்தோம். நாங்கள் மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு. நாங்கள் இங்குள்ள போட்டிகளில் வென்று இந்திய அளவில் போட்டிகளிலும் கலந்து கொள்வது தான் எங்கள் ஆசை. நான், குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா, ‘கபாலி’ ஒலி அமைப்பாளர் ரூபன், ‘கிட்டு மாமா சுசி மாமி’ அருண், சின்னத்திரை நாடகங்கள் இயக்குநர் குறிஞ்சிநாதன், விளம்பர நிறுவனம் நடத்திவரும் சிவகுமார், உதயபிரகாஷ் ஆகிய இவர்கள் தான் எங்களுடைய 7 பேர் குழு.
நாங்கள் அனைவருமே வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் மைம் கலையை முறையாக கற்றோம். இன்றைக்கு எனக்கு கிடைக்கும் அத்தனை பேருக்குமே முக்கிய காரணம் மைம் கலைதான். இந்த மைம் கலை மூலம் பலபேருக்கு நாங்கள் நடிப்பை சொல்லிக் கொண்டு வருகிறோம். திரை உலகில் இருக்கும் மக்களில் பாதி மக்கள் எங்களுடைய மக்கள் தான். அந்த வகையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என பல விஷயங்களை பகிர்ந்தார். இந்த நிலையில் இவருடைய மைம் கலைக்கு தற்போது இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்து இருக்கிறது. அதற்கான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் மைம் கோபிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.