தமிழில் கடந்த 2015 அம்மா ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “மாயாவி” படத்தில் நடித்த மாற்று திறனாளி பெண் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த படத்தில் “கடவுள் தந்த அழகிய வாழ்வு” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வருடியவர் தான் நடிகை விஷ்ணுபிரியா. சமீபத்தில் இவரது கள்ள காதலர் கொடூரமாக கொலை செய்யப்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த இவர் ரமேஷ் கிருஷ்ணா என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி இவர்களுக்கு இரண்டு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ரமேஷ் கிருஷ்ணாவிற்கு உடல் நல குறைபாட்டால் சில ஆண்டுகள் கொடைக்கானலில் தங்கி சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது விஷ்ணுபிரியாவிற்கும் கார் ட்ரைவரான பிரபாகரன் என்பவருக்கு கள்ளகாதல் ஏற்பட்டுள்ள்து.
இந்த விடயம் விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணன் கண்டித்துள்ளார். ஆனால், இதனை கேட்காமல் மீண்டும் பிரபாகரனுடன் பழகி வந்துள்ளார் நடிகை விஷ்ணுபிரியா. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணன் கூலி படையை வைத்து கார் ட்ரைவர் பிரபாகரனை கொலை செய்துள்ளார்.
பிரபாகரனை கொலை செய்த நபர்கள் அவரது உடலை ஒரு பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் பிரபாகரனுக்கு இறுதியாக வந்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரித்த காவல் துறையினர் பிரபாகரனை கொலை செய்த செந்தில் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர். இந்த கொலையை செய்ய சொன்ன விஷ்ணுபிரியாவின் தந்தை சூர்யா நாராயணனையும் போலீசார் தேடி வருகின்றனர்.