விலகிய பட், CWC5யில் தாமுவுடன் நடுவராக இணையப்போகும் பிரபலம். பல Vipகளை பார்த்தவராச்சே

0
225
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்க இருக்கும் நபர் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள். ஆனால், குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்ப நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10.

- Advertisement -

குக் வித் கோமாளி:

இது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபன் அவர்களும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் உடனுக்குடன் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த அப்டேட்:

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் தான் வெளியாகிறது. அதாவது, சீசன் 5க்கான ப்ரொமோட் சூட் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி தொடர்புடையவர்கள் கூறியிருப்பது, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி இருக்குமா? இல்லையா? என்ற பல கேள்விகள் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக, விஜய் டிவியில் இந்த சீசன் ஒளிபரப்பாகும். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்து கூறியது:

முந்தைய சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் நடக்க இருக்கும். நிகழ்ச்சியில் கோமாளிகளாக வழக்கமான சில பேர் வர இருக்கிறார்கள், சில புதிய கோமாளிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள். ப்ரோமோ சூட்டெல்லாம் நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வருவது உண்மை தான். அடுத்த சில நாட்களில் அவரை வைத்து சூட் போவார்கள் என்று நினைக்கிறோம். இன்னும் குக்குகள் குறித்த தேர்வு முழுமையாக முடியவில்லை. சினிமா, சீரியல் பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்கள்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் ரங்கராஜ். இவர் ‘மாதம்பட்டி பாகசாலா’ என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement