புது கார், டான்ஸ் ஸ்டூடியோ தொடர்ந்து குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை வைஷாலி – என்ன தெரியுமா?

0
67
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகை வைஷாலிக்கு சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வைஷாலி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இதைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் திடீரென்று இந்த சீரியலில் இருந்து வைஷாலி விலகிவிட்டார். அதற்குப்பின் இவர் விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். முத்தழகு சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஆனந்த ராகம் போன்ற பிற சேனல்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

வைஷாலி குறித்த தகவல்:

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா ரோலில் வில்லியாக நடித்து வருகிறார். அக்கா, தங்கைகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் மகாநதி. இந்த சீரியலில் விஜய் காவேரி டிராக் சென்று கொண்டிருக்கின்றது. விஜயின் முன்னாள் காதலி தான் வெண்ணிலா. வெண்ணிலா விபத்திற்கு பிறகு தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுகிறார்.

மகாநதி சீரியல்:

பின் வெண்ணிலா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் காவிரியை விஜய் திருமணம் செய்து கொள்கிறார். பின் வெண்ணிலா உயிர் உடன் இருப்பது அறிந்து அவருக்கு பழைய நினைவுகளை கொண்டு வர விஜய் முயற்சி செய்தார். தற்போது வெண்ணிலாவிற்கும் பழைய நினைவுகள் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் காவேரி கர்ப்பமாக இருக்கிறார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன? நடக்கும் என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

வைஷாலி திருமணம்:

மேலும், இந்த சீரியலின் மூலம் வெண்ணிலாவாக மிரட்டி கொண்டிருக்கும் வைஷாலிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் வைஷாலி அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார் வைஷாலி. அந்த வகையில் சமீபத்தில் இவர் தன் கணவருக்கு பரிசாக புதிய கார் ஒன்றை வாங்கித் தந்திருந்தார்.

வைஷாலி கர்ப்பம்:

அதற்குப்பின் இவர் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றையும் திறந்து வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் வைஷாலி- சத்யா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வைஷாலி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இது தொடர்பாக அவர் போட்ட பதிவில், கொஞ்ச நாளாக நாங்கள் ரகசியத்தை வைத்திருந்தோம். ஆனால், இப்ப நான் கர்ப்பமாக இருப்பதை சொல்வதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு குழந்தை சீக்கிரமாகவே வரப்போகிறது. எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறோம். ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த செய்தி உங்களுடன் சொல்வதில் ரொம்ப சந்தோஷம். எங்கள் சிறிய உலகத்திற்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் அன்பும் தேவை என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement