விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதாவிற்கு ஃபோன் செய்த பாட்டி, காவிரிக்கு பூ முடிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். சாரதா, எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா விஷயத்தையும் செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கு பாட்டி, நீங்கள் வந்தால் மட்டும் போதும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். மறுநாள் காலையில் விஜய்- காவிரி இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். அப்போது வீடு முழுக்க பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

வீட்டில் அலங்காரம் செய்திருப்பதை பார்த்து விஜய், காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது பாட்டி, உனக்கு ஐந்தாவது மாதம். பூச்சூடும் விழா நடத்துகிறோம். உங்கள் வீட்டில் இருந்தும் வந்தார்கள். எல்லா ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொன்னார்கள். பின் விஜய்- காவிரி இருவருமே தயாராக போனார்கள். இன்னொரு பக்கம் சாரதா, தன்னுடைய மகளுக்காக பார்த்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.
மகாநதி:
இதை பார்த்து கோபப்பட்ட கங்கா, தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் சாரதா வீட்டில் எல்லோருமே காவேரியின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். விஜய் அவர்களை கவனித்தார். அதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வந்தது. பின் காவேரி ரூமில் தயாராகிக் கொண்டிருந்தார். அதை பார்த்து யமுனா, கங்கா இருவரும் முறைத்துக் கொண்டிருந்தார்கள். பின் யமுனா, எனக்கும் மேக்கப் போடணும் என்று சொன்னவுடன் காவேரி போட சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரிக்கு பூச்சூடல் விழா நடைபெறுகிறது. விஜய், காவிரியின் காவிரியின் அழகில் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். காவிரி- விஜய் இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து கங்கா, யமுனாவிற்கு கடுப்பாகிறது. பின் நல்லபடியாக விழா முடிந்து விடுகிறது. அதற்குப்பின் கங்கா, யமுனா இருவருமே கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி பேசுகிறார்கள். காவிரி ஒத்துக் கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:
பின் கங்கா- யமுனா இருவருமே எங்களுக்கு பணம் தேவை. கண்டிப்பாக வீட்டை விற்க தான் போகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த சமயப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் கூப்பிட்டதால் காவிரியால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விடுகிறார். அதற்குப்பின் காவிரி, தாத்தா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டை விற்பதை பற்றி காவிரி சொல்கிறார். அதற்கு விஜய் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது தாத்தா, நீ அந்த வீட்டை வாங்கிக்கொள் என்று சொல்கிறார். விஜய் நல்ல ஐடியா என்று யோசிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






