மகாநதி அப்டேட் : காவேரி மீது விஜய்க்கு வந்த கரிசனம் – இனி நடக்க போவது இது தான். லீக்கான புகைப்படம்

0
533
Mahanadhi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா என்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்தத் தொடரின் ஹீரோ நிவின் காவிரியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அவர்கள் இருவருக்கும் காதல் மலர்வது ஒரு பக்கமாக இருக்கின்றது. மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்து விடுகிறார். இதை அனைத்தையும் காவேரி தெரிந்து கொள்கிறாள். பின் பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனால் நிவினும் காவிரியும் பசுபதி உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலபடுத்தி காட்டுகிறார்கள்.

- Advertisement -

மகாநதி சீரியல்:

இந்த நிலையில் நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை காரணத்தினால் இவர்கள் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்கள். காவிரி தன்னை அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தியதாக எண்ணி பசுபதி அவர்களும் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது போல கதை நகர்கிறது. சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய்.

சீரியல் கதை:

அவரும் பசுபதி இடம் சண்டை இட்டு காவிரி குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கின்றார். குமரன் அக்கவுண்ட்டில் இருந்த பணத்தை தொலைத்து விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள். இதனைப் பார்த்து விஜய் வீட்டார் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.

-விளம்பரம்-

கொடைக்கானல் சென்ற விஜய்-காவேரி:

காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். மேலும், காவிரி தன் குடும்பத்திற்காக விஜியிடம் வேலை செய்து உதவி செய்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் – காவிரி திருமணம் காண்ட்ராக்ட் என்பது தாத்தாவிற்கு தெரிய வருகிறது. இதை தெரிந்தும் தெரியாமல் போல் தாத்தா அமைதியாக நிற்கிறார். பின் இருவரையும் கொடைக்கானல் அனுப்பி வைக்கிறார். இருவரும் கொடைக்கானல் வருகிறார்கள். மேலும், கடந்த வாரம் எபிசோடில் காவிரி குடித்துவிட்டு தன் மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல்அப்டேட் :

அப்போது காவேரி தன்னுடைய காதலன் நிவின் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். அப்போது விஜய், உன்னுடைய முன்னாள் காதலன் நவீனுக்கு மட்டும் திருமண ஏற்பாடுகள் செய்யாமல் இருந்தால் நீ அவரை தானே திருமணம் செய்து கொண்டிருப்பாய்? என்று கேட்கிறார். அதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாமல் காவிரி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய்.காவேரியை புரிந்துகொண்டு அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு வேலை கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

Advertisement